காடையாம்பட்டி வட்டாரத்தில் வசிக்கும் 409 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் ஆணையை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார்.
கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் முதியோருக்கு அவரவர் இடங்களில் சென்று ஆணைகளை வழங்கினார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்துக்கு உட்பட்ட பண்ணப்பட்டி, கொங்குபட்டி மற்றும் தீவட்டிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 409 ஏழை, எளிய முதியோர்களுக்கு ரூ. 57 லட்சம் மதிப்புள்ள மாதாமாதம் வழங்கும் உதவித்தொகை ஆணையை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார்.
தற்போது கரோனா தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் முதியோர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அந்தந்த கிராமத்திற்கு சென்று உதவித்தொகை வழங்கும் ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஆணையை வழங்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் 2 மீட்டர் இடைவெளி கடைப்பிடித்து உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். வயதானவர்களை கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முதியோர் உதவித்தொகை வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேலுக்கு பயனாளிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.