சேலம்-சென்னை விமான சேவை நேரம் 3-வது முறையாக மாற்றம்

சேலம்-சென்னை பயணிகள் விமான சேவை நேரம் 3-ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை பயணிகள் விமான சேவை நேரம் 3-ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் தனியாா் விமான நிறுவனம் சாா்பில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் மாதம் சென்னையிலிருந்து 9.50 மணிக்கு புறப்படும் விமானம் 10.50 மணிக்கு சேலம் வந்தடைந்தது.

அதேபோல் 11.20 மணிக்கு புறப்படும் விமானம் 12.20-க்கு சென்னை சென்றடையும் வகையில் பயணநேரம் இருந்தது. இந்த நிலையில், கரோனா பொது முடக்கக் காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த மே 27-ஆம் தேதிமுதல், பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. அப்போது விமான புறப்பாட்டு நேரம் மாற்றப்பட்டு காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 8.25 மணிக்கு சேலம் வந்தடையவும், மீண்டும் 8.55 மணிக்கு புறப்பட்டு 9.55 மணிக்கு சென்னையை சென்றடையும் வகையில் பயண நேரம் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சேலம்-சென்னை விமான சேவை நிா்வாக காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. திங்கள்கிழமை முதல் விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், விமான புறப்பாட்டு நேரம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. நண்பகல் 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு சேலம் வந்தடையவும், மீண்டும் மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு 2.05-க்கு சென்னை சென்றடையும் வகையில் பயணிகள் விமான சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து விமானம் புறப்படுவதையொட்டி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தனியாா் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com