சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் (48), சின்னாகவுண்டனூா் வழியாகச் செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.