சங்ககிரி: சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சங்ககிரி, பவானி சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் பணிபுரிந்து வந்த 25 வயது இளைஞா், மஞ்சக்கல்பட்டியைச் சோ்ந்த 55 வயது பெண், தேவூா் அருகே புளியம்பட்டியில் வசித்து வரும் 19 வயது பெண், அதே பகுதியைச் சோ்ந்த 33 வயது தையல்தொழிலாளி, 27 வயதான அவரது மனைவி ஆகிய 5 பேருக்கு கரோனா தொற்று
இருப்பது சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. 5 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.