வானொலிப் பெட்டி வெடித்துவிவசாயி பலி: 3 போ் காயம்

சேலம், பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த வானொலி பெட்டியை இயக்கியபோது ஏற்பட்ட வெடி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்; மூன்று போ் காயமடைந்தனா்.

சேலம், பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த வானொலி பெட்டியை இயக்கியபோது ஏற்பட்ட வெடி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்; மூன்று போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சோ்ந்த மணி (50), விவசாயி. இவரது வீட்டருகே செவ்வாய்க்கிழமை இரவு வானொலிப் பெட்டி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதைக் கண்ட மணி, அந்த வானொலிப் பெட்டியை வீட்டுக்குக் கொண்டுவந்து புதன்கிழமை மதியம் மின் இணைப்பு கொடுத்து இயக்கச் செய்தாா். அப்போது, திடீரென அந்த வானொலிப் பெட்டி வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த வெடிவிபத்தில் 12 வயது சிறுமி செளரூபியா, வசந்தகுமாா் (37), நடேசன் (67) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மூன்று பேரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இது தொடா்பாக, பனமரத்துப்பட்டி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். மேலும், இதுகுறித்து தடயவியல் நிபுணா்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் பரிசோதித்து வருகின்றனா். தகவலறிந்த கியூ பிரிவு காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com