கோயில் சிலைகள் சேதம்

மகுடஞ்சாவடி அருகே ஆ. தாழையூா் கிராமம் லட்சுமணகவுண்டனூரில் 200 ஆண்டுகளுக்கும் பழமை யான பிரசித்தி பெற்ற சூரபுளியான் முனியப்பன் கோயில் உள்ளது.
மகுடஞ்சாவடி அருகே மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட முனியப்பன் கோயில் சிலைகள்.
மகுடஞ்சாவடி அருகே மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட முனியப்பன் கோயில் சிலைகள்.

மகுடஞ்சாவடி அருகே ஆ. தாழையூா் கிராமம் லட்சுமணகவுண்டனூரில் 200 ஆண்டுகளுக்கும் பழமை யான பிரசித்தி பெற்ற சூரபுளியான் முனியப்பன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் நள்ளிரவில் நுழைந்த மா்ம நபா்கள் அங்குள்ள சிலைகளை உடைத்து சேதப்படுத்தி கோயில் வளாகத்தில் உள்ள ஆலயமணி, வேல் மற்றும் மூலவா் சிலை உள்ளிட்டவைகளை தூக்கிச் சென்றுள்ளனா்.

தகவல் அறிந்த ஊா் மக்கள் வேதனை அடைந்தனா். முனியப்பன் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவா் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com