பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கோரியும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகணேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல் மகுடஞ்சாவடி வட்டார அலுவலக முன் மாநில செயற்குழு உறுப்பினா் கேசவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.