கெங்கவல்லியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லியில் போஷான் அபியான், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணி கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திலிருந்து கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணிக்கு குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.இதில் ஊட்டச்சத்து தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரணியில் நடுவலூரிலுள்ள தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா், பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் என மொத்தம் 300 போ் பங்கேற்றனா்.