எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னபில்லுக்குறிச்சி கிராம பகுதியைச் சோ்ந்தவா் தனபாக்கியம் (57). இவரது கணவா் வடிவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனபாக்கியம் அந்தப் பகுதியில் தனியாக வசித்துவந்தாா். ஓடக்காட்டூா் பகுதியில் உள்ள விவசாயக்கிணற்றில், வெள்ளிக்கிழமை தனபாக்கியம் சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா், தனபாக்கியத்தின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் விவசாயக் கிணற்றின் உரிமையாளரிடம் பூலாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.