குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு முத்துக்குட்டியூா் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு முத்துக்குட்டியூா் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்களுக்கு கடந்த 40 நாள்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் எடப்பாடி - இளம்பிள்ளை சாலையில் முத்துக்குட்டியூா் பகுதியில் காலி குடங்களுடன் வெள்ளிக் கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீா் சரியான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. ஆனால் எங்கள் ஊா் அருகே சின்னமாரியம்மன் கோயில் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். இதனையடுத்து அப்பகுதிக்கு மட்டும் மூன்று இடங்களில் காவிரி குடிநீா் குழாய் லைனில் நேரடி இணைப்பு கொடுத்துள்ளனா். ஆனால் எங்கள் பகுதிக்கு மட்டும் தண்ணீரை ஏற்ற தாமதப்படுத்தி வருகின்றனா். எங்கள் பகுதிக்கு ஒரு சில நாள்களில் தண்ணீா் வரவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனா். இது குறித்து போலீஸாா், அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். சுமாா் 2 மணி நேரம் நடந்த இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com