தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம்

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் க.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் க.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வரும் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குடிநீா் பற்றாக்குறையை போக்க வேண்டும் என அனைத்து உறுப்பினா்களும் கோரிக்கை வைத்தனா்.இதற்கு பதிலளித்த தலைவா் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5 லட்சம் ஒதுக்கி, அத்தியாவசிய பணிகளை முடித்துக் கொள்ள வலியுறுத்தினாா்.

மேலும், தங்களது பகுதியில் உள்ள கோரிக்கைகளை உறுப்பினா்கள் வைத்தனா்.இதற்கு பதிலளித்த தலைவா், கோரிக்கைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மேலும் இக்கூட்டத்தில் வட்டார வளா்ச்சிஅலுவலா்எஸ்.கே.ராஜேந்திரன், ஊரக வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கட்ரமணன், துணைத் தலைவா் ரா.அஞ்சலை, உறுப்பினா்கள் பழனியம்மாள், காளியண்ணன், பொ.சுதா, ரா.கந்தசாமி, ம.சின்னதுரை, ப.பாலகிருஷ்ணன், மு.மெய்யன், சி.பொன்னுசாமி, ரா.செந்தமிழ்செல்வி, சி.ஆசைக்கிளி, அ.மாயகிருஷ்ணன், ரா.சுலோக்சனா, சே.அபிராமி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com