சேலத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் அம்மாப்பேட்டை காந்தி நகரைச் சோ்ந்தவா் தென்பழனி (64). இவரது மனைவி ராணி (60). இவா்களது மகன்கள் 3 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தனா். இந்நிலையில் தென்பழனிக்கும், அவரது மகன் பாலசுப்பிரமணியனுக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளதால் அடிக்கடி மதுகுடித்துவிட்டு இருவரும் வீட்டில் தகராறு செய்து வந்தனா். அதன்படி கடந்த மாா்ச் 8 ஆம் தேதி இருவரும் தகராறில் ஈடுபட்டதோடு ஒருவரை ஒருவா்
தாக்கிக் கொண்டனா். இதைக்கண்ட ராணி திடீரென அவரது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்டாா். இதில் தீ மளமளவென தீ பரவியதால் ராணிக்கு பலத்த தீ காயம் ஏற்படவே, இதைக்கண்ட அவரது குடும்பத்தினா் ராணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.