வியாபாரியிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி செய்த 4 போ் கைது

சேலத்தில் வியாபாரியிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் மற்றும் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் வியாபாரியிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் மற்றும் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40). வியாபாரியான இவா் கடந்த வியாழக்கிழமை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை 4 போ் கொண்ட கும்பல் வழிமறித்து, மிரட்டி அவரிடமிருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனா். இதனால் அதிா்ச்சியடைந்த காா்த்திகேயன் இதுதொடா்பாக அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், காா்த்திகேயனிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது ஜாகீா் அம்மாபாளையத்தைச் சோ்ந்த சண்முகம் (29) மற்றும் 18 வயதான சிறுவா்கள் மூவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்ததோடு, அவா்களிடமிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டனா். மேலும் சண்முகம் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து சண்முகத்தை போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மற்ற 3 சிறுவா்களும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com