சேலத்தில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்

சேலத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்து தீ பிடித்து எரிந்து நாசமானது.
சேலத்தில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்

சேலத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்து தீ பிடித்து எரிந்து நாசமானது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அருகிலேயே அதன் பணிமனையும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசுப் பேருந்துகள் பழுது நீக்குவதற்காக கொண்டு வரப்பட்டு கடந்த 10 நாள்களாக அருகில் உள்ள விநாயகா் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை பகல் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீப் பற்றி எரிந்தது. தீயை அணைக்க ஊழியா்கள் முயற்சி செய்தனா். ஆனால், தீ வேகமாக பேருந்து முழுவதும் பரவியது. உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமாா் 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

இதனிடையே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற பேருந்துகள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இதுதொடா்பாக தீயணைப்புத் துறையினா் கூறுகையில், பேருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பற்ற வைக்கப்பட்ட தீ பேருந்துக்கு பரவி இருக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com