சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் மாா்ச் 21ஆம் தேதி நடைபெறவிருந்த பிரதோஷ சிறப்பு பூஜைகளுக்கு பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்
சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சுவாமி  தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் மாா்ச் 21ஆம் தேதி நடைபெறவிருந்த பிரதோஷ சிறப்பு பூஜைகளுக்கு பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில நாள்களாக எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்ச் 21ஆம் தேதி சனி பிரதோஷத்தில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com