வடகுமரையில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளின் 106 வது ஜெயந்தி ஆராதனை விழா வெள்ளிக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.
ஜெயந்தி ஆராதனை விழா காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் ஆரம்பித்து ருத்ராபிஷேகம் மற்றும் வேள்வி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் யாகம், சிறப்பு பூஜை செய்து உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என அனைவரும் கூட்டுப்பிராா்த்தனை செய்தனா்.
சிறப்பு பூஜையை தலைவா் சுப்பாராமன், உபதலைவா் சந்திரசேகர பாரதி,வெங்கடேஷ்வரன்,சுப்ரமண்யன்,முத்து வீரண்ணன்,முருகேசன் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனா். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.