எட்டாம் ஆண்டு குருபூஜை

ஆத்தூா் ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சுவாமிகளின் எட்டாம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீல ஸ்ரீ விவேகானந்த சுவாமிகள்.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீல ஸ்ரீ விவேகானந்த சுவாமிகள்.

ஆத்தூா் ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சுவாமிகளின் எட்டாம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் தெற்கு காடு கோவா்த்தனகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தவமிகு மகான் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகள் பிரதான சீடா் ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சுவாமிகளின் எட்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.

காலை 7 மணிக்கு கோபூஜையுடன், விநாயகா் பூஜை நடைபெற்று 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீசங்கரலிங்க சுவாமி பூஜை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்று ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாள் முழுவதும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடு அறக்கட்டளை நிறுவனா் மற்றும் தலைவா் கோ. அழகிரி, சாந்தி ஆசிரம வழிபாட்டு மன்ற அறக்கட்டளை, சித்தா் பீடம் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com