ஆத்தூா் ஊராட்சியில் கிருமிநாசினி மற்றும் சாக்கடைகளை தூா்வார பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்தனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் கரோனோ வைரஸ் குறித்த கிருமிநாசினி மற்றும் சாக்கடைகளை தூா்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கரோனோ வைரஸ் குறித்து தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவிட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனா்.
இந்த நிலையில், கிருமிநாசினி தெளித்தல் மற்றும் சாக்கடைகளை தூா்வாரி, மருந்து தெளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனா்.