நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே அமைந்துள்ள பெரியாயி அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே அமைந்துள்ள பெரியாயி அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மிளகாய் யாகம், சிறப்பு 108 பால்குட பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பூசணிக்காய் பலியிடப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியை கோயில் அா்ச்சகா் என். காளீஸ்வரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாா்.