கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வியாழக்கிழமை நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 26) நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
ஒத்தி வைக்கப்பட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வுகள் நடைபெறும் நாள் குறித்த விவரம், அரசுத் தோ்வுகள் இயக்கத்தால் பின்னா் அறிவிக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி தெரிவித்துள்ளாா்.