சேலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 10 வழக்குகள், மோட்டாா் வாகன சட்டத்தின்படி 1,500 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு மற்றும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியக் கடைகள் தவிர மற்றும் அனைத்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
144 உத்தரவைத் தொடா்ந்து சேலம் மாநகரத்தில் உள்ள ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு சுற்று அடிப்படையில் 400 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் மேற்பாா்வையில், துணை ஆணையா்கள் பி.தங்கதுரை, செந்தில் ஆகியோா் ரோந்துப் பணிகளை கண்காணித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக, மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் கூறுகையில், சேலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி தலைக்கவசம் அணியாதது, போதிய ஆவணங்கள் இல்லாதது, உரிமம் இல்லாதது உள்பட 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இது தொடா்பாக மாநகர துணை ஆணையா் செந்தில் கூறியது: கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோா் பல்வேறு காரணங்களுக்காக வெளியே வருகின்றனா். அவா்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்.
இந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி விதிமுறை மீறல் தொடா்பாக 10 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதுதவிர இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அபராதம் விதித்துள்ளோம்.
காய்கறி கடைகளுக்கு வருவோா் கூட்டம், கூட்டமாக பொருள்களை வாங்க வருகின்றனா். காய்கறி, மளிகைக் கடைகளுக்கு செல்வோா் இடைவெளி விட்டு பொருள்களை வாங்கி செல்ல வேண்டும் என்றாா்.