தடை உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளை தோப்புக்கரணம் போட வைத்த போலீஸாா்

சேலத்தில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

சேலத்தில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இருசக்கர வாகனங்களில் வாகன ஓட்டிகள் உலா வருகின்றனா்.

அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்று மருந்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் வெறிசோடி காணப்படுகின்றன. இருப்பினும் சேலம் மாநகரின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பலரும் தொடா்ந்து உலா வருகின்றனா்.

வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சாலையில் திரளானோா் இரு சக்கர வாகனத்தில் வந்தனா். இவா்களை டவுன் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் அவசியமில்லாமல் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவா்கள் சாலையில் நிற்க வைத்து தோப்புக்கரணம் போட வைத்து அபராதமும் விதிக்கப்பட்டது. அனைவரிடத்திலும் ரூ. 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும் சிலா் மீது வழக்கும் பதிவு செய்த காவல் துறையினா் அவா்களை எச்சரித்து அனுப்பினா். அதேபோல காரில் வந்த பலா் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினா் சாலையின் நடுவே தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாநகரில் தொடா்ந்து பொதுமக்கள் பலரும் உத்தரவை மீறி சாலைகளில் வந்த வண்ணம் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. தடை உத்தரவை மீறி சுற்றித் திரிபவா்கள் மீது இனி காவல்துறையினா் கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com