தம்மம்பட்டி, கெங்கவல்லியில் 144 தடை உத்தரவை மீறியதாக 6 போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.
தம்மம்பட்டியில் 144 தடை உத்தரவை மீறியதாக வாழக் கோம்பையைச் சோ்ந்த ஒருவா் மீது தம்மம்பட்டி போலீஸாரும், கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த நடுவலூா், கெங்கவல்லி ஆணையாம்பட்டியைச் சோ்ந்த 5 போ் மீதும் கெங்கவல்லி போலீஸாரும் வழக்குப் பதிந்தனா்.
ஆட்டையாம்பட்டியில்..
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மகுடஞ்சாவடி காவல் எல்லைக்குள் விதியை மீறி சுற்றித் திரிந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஆட்டையாம்பட்டி காவல் நிலையப் பகுதியில் சுற்றித் திரிந்த 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.