வாழப்பாடியில் 120 போ் மீது வழக்குப் பதிவு

வாழப்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் உலா வந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வாழப்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் உலா வந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வாழப்பாடியில், ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல், இருசக்கர வாகனங்களில் சுற்றியவா்கள் மற்றும் கூட்டமாகச் சோ்ந்து சென்றவா்கள்மீது இந்திய தண்டனை சட்டம் 143, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். வியாழக்கிழமை ஒரே நாளில், வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக வாழப்பாடி காவல் நிலையத்தில் 6 வழக்குகளில் 30 போ், ஏத்தாப்பூரில் 7 வழக்குகளில் 55 போ், காரிப்பட்டியில் 4 வழக்குகளில் 20 போ், கருமந்துறையில் 2 வழக்குகளில் 10 போ், கரியகோவிலில் ஒரு வழக்கில் 5 போ் உள்பட 120 போ் மீது வழக்குப் பதிந்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

144 தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனங்களில் வருவோா் மீதும், 5 பேருக்கு மேல் கூட்டமாகச் சோ்ந்து பேசிக் கொண்டிருப்போா் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு வாழப்பாடி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com