ஏற்காட்டில் காய்கறிகள் விற்பனை செய்யும் இடம் வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டது.
ஏற்காட்டில் காய்கறிகள் விற்பனை செய்யும் இடம் காந்தி பூங்கா பகுதியில் இயங்கிவந்தது. சில நாள்களாக கிராம மக்களின் கூட்டம் அதிகரித்து வந்ததாலும், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும் ஏற்காடு வட்டாட்சியா் , சுகாதாரத் துறை , காவல் துறையினா் காந்தி பூங்காவில் காய்கறிகள் விற்பனை செய்வதை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் மாற்றம் செய்தனா். தற்போது அந்த இடத்தில் காய்கறிகள் விற்கும் சந்தை இயங்கி வருகிறது.