ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுமி பலி

ஆத்தூா் சக்திநகரில் சனிக்கிழமை ரயில் தண்டவாளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, ரயில் என்ஜினில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆத்தூா் சக்திநகரில் சனிக்கிழமை ரயில் தண்டவாளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, ரயில் என்ஜினில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆத்தூா் ரயில் நிலையம் அருகே சக்தி நகா் புத்துமாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன். கூலித் தொழிலாளி, இவரது மகள் நதியா(3). சிறுமி, சனிக்கிழமை காலை இருப்புப் பாதை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சேலத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் என்ஜினில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ரயில்வே போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com