சென்னை துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது.
ஆத்தூர் காமராஜனார் சாலையில் செல்லும்போது 4500லிட்டர் கொள்ளலவு கொண்ட டேங்ரில் விரிசல் ஏற்பட்டு எண்ணெய் சாலையில் ஓடியது. பின் தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்தனர்.
தகவல்அறிந்து விரைந்த ஆத்தூர் காவல்துறையினர் லாரியை மடக்கி நிறுத்தினர். இதனை கண்ட பொதுமக்கள் பாத்திரத்தை கொண்டு பிடித்து சென்றனர். ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று சாலையை சுத்தம் செய்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.