ஆத்தூா் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா்கள் தினம் தேமுதிக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா். இளங்கோவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டி 60 செவிலியா்களுக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தி ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, நெல்லிக்காய் என பழத் தொகுப்பை அனைவருக்கும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆத்தூா் நகரச் செயலாளா் சீனிவாசன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணிச் செயலாளா் வேங்கை வெங்கடேசன், ஆத்தூா் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.