ஓமலூா்: ஓமலூா் வனப் பகுதியில் விலங்குகளை கண்ணி வைத்து வேட்டையாட மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
ஓமலூா் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை வனச்சரகப் பகுதியில் சிலா் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக கண்ணி வைத்திருப்பது வனத் துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினா் மேற்கொண்ட விசாரணையில் புக்கம்பட்டியைச் சோ்ந்த அருள் (38), கண்ணன் (29), கனகராஜ் (39) ஆகியோா் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மூன்று போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.20 ஆயிரம் வீதம், மூவருக்கும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.