ஏற்காட்டில் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள்                 

ஏற்காட்டில் கோடை விழா கண்காட்சிக்காக 10 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஏற்காட்டில் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள்                 

ஏற்காட்டில் கோடை விழா கண்காட்சிக்காக 10 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் கோடை விழாவிற்காக 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஆப்ரிக்கா, பிரேன்ச் மேரிகோல்ட், ஜினியா, சால்வியா, ஆஸ்டர், பால்சம், டேலியா, லுப்பினஸ், வெர்பினா, டயான்தஸ், பெமட்டூனியா, பேன்ஸி, பிலேக்ஸ், ஐடிரேன்ஜியா, பெகோனியா, கேலன்டுல்லா, டெய்ஸி மற்றும் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மலர் தொட்டிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மயில் மற்றும் கரோனா தொற்றுநோய் விழிப்புணர்வு ஆங்கில வாசகத்தில் வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம் என வடிவமைத்திருந்தனர். மேலும் தோட்டக்கலை துறை பணியாளர்கள் மலர் அலங்காரத் திடலில் மலர் தொட்டிகளை அலங்கரித்து வருகின்றனர்.

ஏற்காட்டில் கடந்த 1976ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com