ஏற்காட்டில் மரத்திலிருந்து விழுந்து பலியான கூலி தொழிலாளிக்கு இழப்பீடு கோரி மலைவாழ் மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு பட்டிபாடி கிராமம் ஜெயராமன்(41). இவர் காக்கம்பாடி கிராமத்தில் கூந்தபனை மரத்தில் தேன் எடுக்க சென்ற போது தவறிவிழுந்து திங்கட்கிழமை மாலை இறந்தார். காவல் துறை பிரேதபரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செவ்வாய் கிழமை காலை ஏற்காடு காவல் நிலையத்தில் ஜெயராமன் குடும்பத்தினர், ஊர் மக்கள், அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட குடும்பதிற்கு இழப்பீடு தொகை வாங்கி தறுமாறு காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.