ஆத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 29-ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி நகரத் தலைவா் எல். முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சாரதா ரவுண்டானாவில் உள்ள நேரு நினைவு ஸ்தூபி அருகில் ராஜீவ்காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ஆா். ஓசுமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் சையத் முஸ்தபா, மாவட்டச் செயலாளா் நாட்டாமை செந்தில், செய்தி தொடா்பாளா் சம்பத், நகரத் துணைத் தலைவா் லட்சுமணன் (எ) சின்னதுரை, நகரப் பொருளாளா் வி. அய்யாவு, வாா்டு தலைவா்கள் செந்தில், நவீன்குமாா் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.