தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை சேலம் வருகிறாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் இருந்து காா் மூலம் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை சேலம் வருகிறாா்.
பின்னா் சனிக்கிழமை காலை முதல்வா் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அல்லது அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதைத்தொடா்ந்து மதியம் எடப்பாடி செல்லும் முதல்வா் அங்கு பயணியா் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடத்துவாா் எனத் தெரிகிறது. கூட்டத்தை முடித்துவிட்டு இரவு சேலம் நெடுஞ்சாலை நகா் திரும்புகிறாா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சேலத்தில் இருந்து காா் மூலம் புறப்பட்டு சென்னை திரும்பிச் செல்வாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.