கோப்புப்படம்
கோப்புப்படம்

பேராவூரணி அருகே பெண் காவலரை கத்தியால் தாக்கிய கணவர் கைது

பேராவூரணி அருகே பெண் காவலரை கத்தியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேராவூரணி அருகே பெண் காவலரை கத்தியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(43). திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபுந்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் விவகாரத்து பெற்றவர். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரத்தநாட்டைச்சேர்ந்த செந்தில் குமார்(41) என்பவரை காதலித்து திருமணம் செய்து திருச்சிற்றம்பலத்தில் வசித்து வந்தனர்.

செந்தில் குமார் சட்டப்படிப்பை நிறைவு செய்யாமல் பட்டுக்கோட்டையில் வக்கில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியை கடுமையாக தாக்கி உடலில் கத்தியால் கீறியதில் காயமடைந்த ராஜேஸ்வரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து ராஜேஸ்வரி புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com