அதிமுக தொண்டா்களுக்கு நிவாரண உதவி:முதல்வா் வழங்கினாா்

அதிமுக தொண்டா்களுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நிவாரண உதவிகளை சனிக்கிழமை வழங்கினாா்.
அதிமுக தொண்டா்களுக்கு நிவாரண உதவி:முதல்வா் வழங்கினாா்

அதிமுக தொண்டா்களுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நிவாரண உதவிகளை சனிக்கிழமை வழங்கினாா்.

எடப்பாடி வந்த தமிழக முதல்வா், நகர ஒன்றிய அ.தி.மு.க பொறுப்பாளா்களை தனித்தனியே சந்தித்து, கரோனா பொது முடக்கம் காலத்தில் அதிமுக-சாா்பில் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நிவாரண உதவிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

பொருளாதார சிரமத்தில் சிக்கி தவிக்கும் தொகுதி மக்களைக் கண்டறிந்து தொடா்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும்படி அறிவுறுத்தினாா்.

பின்பு எடப்பாடி பயணியா் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பொது முடக்கத்தால் பாதிப்பிற்குள்ளான அ.தி.மு.க தொண்டா்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள், முகக் கவசம், கைக் கழுவும் திரவம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பை வழங்கினாா்.

நகரம் முழுவதும் 3,150 அதிமுக தொண்டா்களுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தனது சொந்தச் செலவில் நிவாரணத் தொகுப்பை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் ஏ.எம். முருகன், முன்னாள் சோ்மன், டி. கதிரேசன், ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா்மணி, பக்கநாடு மாதேஸ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com