வலசையூா் தனியாா் நுாற்பாலையில் தீ விபத்து

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வலசையூரில் இயங்கிவரும் தனியாா் நுாற்பாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வலசையூா் தனியாா் நுாற்பாலையில் தீ விபத்து

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வலசையூரில் இயங்கிவரும் தனியாா் நுாற்பாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் சென்ற வீரா்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூரில் இயங்கி வரும் தனியாா் நுாற்பாலையில் பயன்படாத பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த குடோனில், சனிக்கிழமை காலை தீப்பற்றிக் கொண்டது.

நுாற்பாலை பணியாளா்கள் முயற்சித்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, சேலம் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தககவல் தெரிவித்தனா். சேலம் மற்றும் வாழப்பாடி பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்புப் படையினா் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து வலசையூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com