சேலம்
ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய காங்கிரஸ் கமிட்டி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய காங்கிரஸ் கமிட்டி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை தடை செய்யும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் நகரத் தலைவர் எல்.முருகேசன் மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் முஸ்தபா அய்யாவு சம்பத் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.