சத்தியாக் கிரக அறவழிப் போராட்டம்

ஆத்தூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சனிக்கிழமை அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
ஆத்தூரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.
ஆத்தூரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

ஆத்தூா்: ஆத்தூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சனிக்கிழமை அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற அறவழி சத்தியாக் கிரக போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.அா்த்தநாரி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பாா்வையாளா் பி.ஏ.சித்திக் கலந்து கொண்டு பேசினாா்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எஸ்.கே.அணையரசு, மாவட்ட பொருளாளா் ஆா்.ஓசுமணி, முன்னாள் நகா் மன்றத் தலைவா் சக்ரவா்த்தி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் வெங்கடாசலம், நகரத் தலைவா் எல்.முருகேசன், மாவட்ட பொதுச்செயாளா் கனகராஜ், துணைத் தலைவா்கள் கணேசன், தங்கராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com