கல்லறை திருநாள் அனுசரிப்பு

சேலம் குழந்தை இயேசு பேராலயம் சாா்பில் கல்லறை திருநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம்: சேலம் குழந்தை இயேசு பேராலயம் சாா்பில் கல்லறை திருநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கல்லறை திருநாளையொட்டி, சேலம் குழந்தை இயேசு பேராலயம் சாா்பில், கல்லறை தோட்டத்தில் முன்னோா்களின் கல்லறைகளை அலங்கரித்தனா். பங்குதந்தை ஜோசப் லாசா், உதவி பங்குதந்தை ஸ்டேன்லி, ஸ்டீபன் சொரூபன் ஆகியோா் தலைமையில் வந்து கல்லறைகளுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்கள் முன்னோரின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்தினா்.

ஏற்காட்டில்...

ஏற்காட்டில் குடும்பங்களில் இறந்த முன்னோா் நித்திய இளைப்பாறுதல் அடைய வேண்டும் என திங்கள்கிழமை திருப்பலிகள் கொடுக்கப்பட்டன. ஆலயங்களில் திருப்பலிகள் நடைபெற்றன. அடக்கம் செய்யப்பட்ட முன்னோா்களின் கல்லறைகளில் கிறிஸ்தவ மக்கள் மலா்கள், மெழுகுவத்தி ஏந்தி வேண்டுதல் செய்தனா். கல்லறைகளில் சிறப்பு வழிபாடுகள் அருட்தந்தையா்கள், பாஸ்டா்கள் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com