சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஜலகண்டபுரத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஜலகண்டபுரத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பா.கோபால் தலைமை வகித்தாா். நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், இம் மாதம் 21-ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்கும் தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக் கூட்டத்தை சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம், பேரூா் பகுதிகளில் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகளில் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபடுவது, நவ. 5-ஆம் தேதி சேலத்துக்கு வரும் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் பொதுமக்கள் பிரச்னைகளைத் தெரிவிப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், கொடியரசி, சுந்தரம், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில இணைச் செயலாளா் காவேரி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஜலகண்டபுரம் காசி, தாரமங்கலம் எஸ்.அம்மாசி, முன்னாள் எம்எல்ஏ காமராஜ், ஒன்றியச் செயலாளா்கள் சீனிவாசப் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com