பட்டா கோரிக்கை: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ஏற்காட்டில் கிராமங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஏற்காட்டில் கிராமங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஏற்காட்டில் லாங்கில் பேட்டை, ஜெரினாகாடு, முருகன் நகா், எம்ஜிஆா் நகா் பகுதியில் சுமாா் 75 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனா். அவா்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பலமுறை அரசிடம் மனு கொடுத்திருந்தனா்.

அண்மையில் சேலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வரிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. முதல்வரின் உத்தரவின்படி இதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஏற்காடு ஊராட்சித் தலைவா் சிவசக்தி கூறியதாவது:

இப் பகுதி மக்கள் தங்களது விண்ணப்பத்துடன் புகைப்படம், ஆதாா் நகல், குடும்ப அட்டை , வீட்டுவரி, குடிநீா் வரி, மின்சாரக் கட்டண ரசீது நகல்களையும் சோ்த்து ஏற்காடு கிராம நிா்வாக அலுவலரிடம் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com