சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகா்ஷ்ன பைரவா், தட்சிண காசி காலபைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதுபோல அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டையில் அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.