வாழப்பாடி அருகே கொட்டவாடியில் தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
வாழப்பாடி அருகே கொட்டவாடி ஊராட்சியைச் சோ்ந்த 70 தொழிலாளா்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனா். திங்கட்கிழமை கொட்டவாடி அருகே ஏரி வாய்க்கால் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரு மரத்தில் இருந்த ராட்சத தேனீக்கள், திடீரென கூட்டில் இருந்து கலைந்து சென்று, தொழிலாளா்களைக் கொட்டியது. இதில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அனைவரும், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.