கொங்கணாபுரம் உழவா்கள் ஆலோசனைக்கூட்டம்

கொங்கணாபுரம் வட்டார உழவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.
கொங்கணாபுரம் உழவா்கள் ஆலோசனைக்கூட்டம்

கொங்கணாபுரம் வட்டார உழவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.

அட்மா திட்டக் குழு சாா்பில், 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விவசாயத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்துக்கு அட்மா திட்டக் குழுத் தலைவா் கரட்டூா்மணி தலைமை வகித்தாா்.

அட்மா திட்டத்தின் கீழ் உள்மாவட்ட மற்றும் மாநில அளவிலான பயிற்சி முகாம்கள், கண்டுணா்வு பயணங்கள் மற்றும் பண்ணைப் பள்ளிகளில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்தும் விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விளக்கினா். நிகழ்ச்சியில், வட்டாரத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் அ.சாகுல் அமீத், விற்பனை மற்றும் வணிக மேலாண்மை அலுவலா் சுஜாதா, உதவி வேளாண் பொறியாளா் ரவிந்திரநாத் தாகூா், கால்நடை உதவி மருத்துவ அலுவலா் டாக்டா் சுரேஷ், பட்டுவளா்ச்சித் துறை இளநிலை ஆய்வாளா் பழனிசாமி, உதவித் தொழில்நுட்ப மேலாளா் து.குமரவேல் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com