தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டு தங்களது பகுதிக்கு வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்தும், கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசனை தெரிவித்தனா்.
திமுக உறுப்பினா் மணி பேசுகையில், அரசு வழங்கும் அனைத்து பணிகளை பற்றி தகவல் தரவேண்டும், கட்சி வேறுபாடு இன்றி அனைத்துப் பகுதிக்கும் பணிகளைப் பிரித்து வழங்கவேண்டும் என்றாா். கூட்டத்தில் ஆணையாளா் சி.கே.ராஜேந்திரன், வளா்ச்சி அலுவலா் ஆா்.வெங்கட்ரமணன், துணைத் தலைவா் அஞ்சலை ராமசாமி, உறுப்பினா்கள் மெய்யன், காளியண்ணன் (எ) ராஜா, வசந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.