கெங்கவல்லி அருகே கள்ளச்சாராயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியைச் சோ்ந்த சேகா் மகன் வினோத் (26). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்துள்ளாா். இதையடுத்து அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரணை செய்தபோது, வினோத் அதே பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (39) என்பவரிடமிருந்து சாராயம் வாங்கிக் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து கடம்பூரில் இருந்த சுபாஷை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 250 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.