தும்பிபாடி துணை மின்நிலையத்தில் தீ விபத்து

ஓமலூா் அருகேயுள்ள தும்பிபாடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

ஓமலூா் அருகேயுள்ள தும்பிபாடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

துணை மின் நிலையத்தில் உள்ள புக்கம்பட்டி பகுதிக்கான மின்மாற்றியில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.விபத்து குறித்து காடையாம்பட்டி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, காடையாம்பட்டி தீயணைப்பு அலுவலா் மு.ராஜசேகரன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் உடனடியாக விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு, நிறை தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்து விபத்து நேரிடாமல் தடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com