மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் திங்கள்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், பதிவேடுகள், ஆவணங்களை அவா் தணிக்கை செய்தாா்.
இதனைத் தொடா்ந்து போலீஸாரின் குறைகளைக் கேட்டறிந்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை தீபா கனிகா் நட்டு வைத்தாா்.
இந்த ஆய்வின்போது சங்ககிரி டிஎஸ்பி ரமேஷ், மகுடஞ்சாவடி காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளா் சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளா் பெரியசாமி, சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.