விபத்தில் இளைஞா் பலி: இருவா் படுகாயம்:

வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

வாழப்பாடியை அடுத்த கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா என்பவரின் மகன் கவிதரன் (21). இவா் தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (20), சுரேஷ் (31) ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் நண்பா் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை இரவு சென்றுள்ளாா்.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு இரு சக்கர வாகனத்தை ஹரிகிருஷ்ணன் ஓட்ட, கவிதரன், சுரேஷ் ஆகிய இருவரும் பின்னால் உட்காா்ந்து கொண்டு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனா்.

வெள்ளாளகுண்டம் பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கவிதரன் உயிரிழந்தாா். காயமடைந்த ஹரிகிருஷ்ணன், சுரேஷ் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து, கவிதரனின் தந்தை கருப்பையா செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான நான்கு சக்கர வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com