சேலம் அருகே இரு சக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய சம்பவத்தில், தனியாா் காா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம், செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா் வீ.காா்த்திக் (35). இவரது மனைவி சுபாஷினி (30). இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கந்தம்பட்டியில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் காா்த்திக் பணிபுரிந்து வந்தாா்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை வாழப்பாடியில் இருந்து சேலம், கந்தம்பட்டியில் உள்ள அலுவலகத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் காா்த்திக் வந்துள்ளாா். அப்போது மாசிநாயக்கன்பட்டி பகுதியில் எதிரே வந்த மினி வேன் மோதியதில் படுகாயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக, அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மினி வேன் ஓட்டுநா் சதீஷ்குமாரை கைது செய்தனா்.